டில்லி ஜாமியா பல்கலை., கேட் அருகே துப்பாக்கிச்சூடு

Updated : பிப் 03, 2020 | Added : பிப் 03, 2020 | கருத்துகள் (21) | |
Advertisement
புதுடில்லி: ஜாமியா பல்கலை அருகே மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குடியுரிமை சட்ட திருத்தத்தை கொண்டு வந்தது. இதனை எதிர்த்து தலைநகர் டில்லியில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் தொடர்ந்து போராட்டம்

புதுடில்லி: ஜாமியா பல்கலை அருகே மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




latest tamil news


மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குடியுரிமை சட்ட திருத்தத்தை கொண்டு வந்தது. இதனை எதிர்த்து தலைநகர் டில்லியில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. மேலும் பல்வேறு பல்கலை மாணவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றனர். மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர்பிரசாத் போராட்டம் நடத்துபவர்களிடம் சிஏஏ குறித்து விவரித்து பேச்சுவார்த்தை நடத்த தயார் என அறிவித்திருந்தார். இருப்பினும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.



latest tamil news


இந்நிலையில் தலைநகர் டில்லியில் உள்ள ஜாமியா பல்கலைகழகத்தின் 5வது கேட் அருகே இன்று (2 ம் தேதி) நள்ளிரவில் மர்ம நபர்கள் இரண்டு பேர் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்கு போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பல்கலைகழகத்தின் முன்னர் மக்கள் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (21)

Raj - Chennai,இந்தியா
03-பிப்-202015:59:53 IST Report Abuse
Raj போராட்டத்தின்போது வன்முறையை நிறுத்திவிட்டு வந்தால்தான் வழக்கை விசாரிப்போம் என முதலில் கூறிய உச்ச நீதி மன்றம் பிறகு மீண்டும் கால அவகாசம் கொடுத்து தள்ளி வைத்தது. ஆனால் இப்போது வன்முறையில் சட்டத்தின் ஆதரவாளர்கள் ஈடுபடுகிறார்கள். போலீஸ் அடக்குமுறைகளை வரவேற்று பேசிய மோடி துப்பாக்கி சூடு குறித்து ஒன்றும் வாய் திறக்கவில்லை. துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் முஸ்லிம்களாக இருந்திருப்பின் மோடியும் அமித் ஷாவும் எச். ராஜாவும் இப்படி இன்னும் சும்மா இருந்திருப்பார்களா ? எதிர்க்கட்சிகளும் நாதி அற்று உள்ளன. அல்லது இது போன்ற செயல்கள் இன்னும் அதிகம் நடக்கட்டும், அப்போதுதான் மக்களும் மோடி , அமித் ஷாவின் குற்றோரை புத்தியை புரிந்து கொள்வார்கள் என சும்மா இருக்கிறார்கள் என நினைக்கிறேன். போராட்டம் செய்பவர்கள் நீதி மன்றத்தில் மத்திய அமைச்சர் அனுராக் தூண்டிய பேச்சால்தான் துப்பாக்கி சூடுகள் நடக்கின்றன என கூறி அவரை கைது செய்ய சொல்லியும் பதவி நீக்க கோரியும் இன்னும் ஏன் வழக்கு போடவில்லை ?
Rate this:
Cancel
Fardhikan - Rajakambeeram,இந்தியா
03-பிப்-202012:42:42 IST Report Abuse
Fardhikan பாவம் ஏதோ ஒரு மன நலம் குன்றிய வாலிபன் போலகட்சில இந்தமாதிரி இன்னும் எத்தனைபேர் இருக்கானுகளோ எப்ப வெளில வந்து சுடுவானுகளோ தெரியலை ஆனா ஒன்னு நாடு ஓஹோன்னு போவுது
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
03-பிப்-202012:29:52 IST Report Abuse
Malick Raja யாரவது ஒரு அமைச்சரோ ,பிரதமரோ ,ஜனாதிபதியோ .. ஏன் தலையில் ஒண்ணுமில்லாத அமித்ஸாவோ CAA.க்கு என்ன சான்றிதழ்கள் வேண்டும் என்று இதுவரை வெளிப்படுத்தவே இல்லை .. உதாரணத்திற்கு ஒருவரிடம் பாஸ்போர்ட் இருக்கிறது அதுபோதும் என்று யாராவது சொல்கிறார்களா. அல்லது ஆதார்கார்டு போதுமானது என்பார்களா .. ரேஷன் கார்டு ,பான்கார்டு .பிறப்பு சான்றுதல் ..வாக்காளர் அட்டை .ஓட்டுநர் உரிமம் இதெல்லாம் வேண்டுமென்பார்களா? அதில்லாமல் சொத்துப்பத்திரம் ..வரி பில்கள் . இப்படி எவ்வளவோ இருக்கிறது .. இனியும் ஒரு குடியுரிமை அடையாளம் என்று மக்களிடம் சென்றால்.. செல்பரிடம் உங்களுக்கு கிடைத்த குடியுரிமையை முதலில் எங்களுக்கு தெளிவாக்கு என்றால் என்ன செய்வார்கள் .. கொஞ்சம் கூட அடிப்படை அறிவில்லாமல் ஒட்டுப்பிச்சை எடுத்து ஆட்சிக்கு வந்தவர்கள் தங்கள் எஜமானர்களிடமே குடியுரிமை பெறுங்கள் என்று சொன்னால்.. ஏண்டா நாங்கள்தானடா ஓட்டுப்போட்டோம் நீங்கள் வருவதற்கு ..அப்போது எங்களிடம் குடியுரிமை இல்லாமல் இருந்ததே இப்போது குடியுரிமையை எங்களுக்குக் வழங்க நீயார் என்று கேட்பதை எந்த சக்தியாலும் தடுக்கவே முடியாதே .. இதல்லாம் விளங்காமல் தானும் பைத்தியமாக இருந்து கொண்டு இருப்பதில் தவறில்லை பிறரையும் பைத்தியமாக்க நினைத்தால் பைத்தியம் தானாக ஒழிந்துபோகுமளவுக்கு அல்லவா மக்களின் நடவடிக்கை இருக்கும்.. ஆக தானாக திருந்தினால் நல்லது இல்லையேல் மக்களின் நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் அதாவது இந்திய மக்கள் வெகுண்டால் யாருமே ஆட்சியாளர்களை காக்கவரமாட்டார்கள்..இராணுவம் ,காவல்துறை தானாக மக்களுக்கு மட்டுமே பாதுகாப்பாக இருக்கும் ... ஆட்சியாளர்கள் இனியும் காலந்தாழாது திருத்துவதே மனிதமாண்பு ...
Rate this:
Davamani Arumuga Gounder - Namakkal,இந்தியா
03-பிப்-202015:37:26 IST Report Abuse
Davamani Arumuga Gounderடேய் தம்பி.. Malick Raja - வெளிநாட்டில் இருந்து கொண்டு (?) இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அமல் செய்யப்பட்ட, மாட்சிமை மிக்க சட்டத்திற்கெதிராக மக்களைத்தூண்டி விட்டு கருத்துப்போடும் நீயும்.. சட்டத்தின் பார்வையில் அகப்பட்டு, உனது இணையதள முகவரி கண்டுபிடிக்கப்பட்டு, சட்டத்தின் முன்னால், தேசத்துரோக குற்றம் சுமத்தப்பட்டு, நீயும், உன்னைப்போல மக்களை இந்திய அரசுக்கு எதிராக தூண்டிவிடுவோரும் சிறையில் அடைக்கப்பட்டு, உங்களுடைய மற்றும் உங்கள் குடும்பத்தாருடை ஆதார், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் உள்ளிட்ட னைத்தும் இரத்து செய்யப்பட்டால் மட்டுமே தாண்டா நாடு சுபிட்சம் அடையும்.. நம் பிரதமரும், உள்துறை அமைச்சரும் ஏன் இன்றமும் தாமதிக்கிறார்கள் என்று தெரியவில்லை.. ஆனால். நான் கூறியுள்ளது நிச்சயமாக நடக்கும்.. அதுவும் எமெர்ஜென்ஸி அமல் செய்யப்பட்டு இதெல்லாம் நிகழ்ந்தால்.. நீங்கள் எல்லோருமே '' ஆப்பில் சிக்கிக் கொண்ட குரங்குகள் '' தாண்டா.. இன்னும் சிலநாட்கள் பொறுத்திரு.. உன் அவா நிறைவேறும்,,...
Rate this:
sri - trichy,இந்தியா
03-பிப்-202016:43:57 IST Report Abuse
sriஅதுசரி ஒட்டு போட்டவன் இதெல்லாம் கேட்கலாம் எங்கேயோ உக்காந்துகிட்டு இன்டர்நெட்ல இதுமாதிரி எழுதக்கூடாது ரொம்ப தப்பு ஒரு பத்து தோப்புக்கரணம் போடு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X