ஊட்டி:''மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை நடப்பாண்டு அமல்படுத்தப்படும்,' என, மனிதவள மேம்பாட்டு அமைச்சக ஆலோசகர் தெரிவித்தார்.நீலகிரி மாவட்டம், ஊட்டியில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக ஆலோசகர் உமாகாந்த் திரிபாதி நிருபர்களிடம் கூறியதாவது:புதிய கல்வி கொள்கை நடப்பாண்டு அமலுக்கு வருகிறது. இது மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பெரும் சாதனையாகும். பட்ஜெட் கூட்ட தொடர் முடிவடைந்ததும், புதிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும். புதிய கல்வி கொள்கையை, தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன. அமல்படுத்துவதில் எவ்வித சிக்கலும் இல்லை.இவ்வாறு, உமாகாந்த் திரிபாதி தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE