மோட்ச விரதமிருந்த ஜெயின் முதியவர் மரணம்| Dinamalar

மோட்ச விரதமிருந்த ஜெயின் முதியவர் மரணம்

Updated : பிப் 11, 2020 | Added : பிப் 10, 2020 | கருத்துகள் (3) | |
வந்தவாசி : சல்லேகன் விரதமிருந்த, 95 வயது ஜெயின் முதியவர் மரணமடைந்தார். காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பறம்பூரைச் சேர்ந்தவர், சிம்மசந்திர ஜெயின் சாஸ்திரியார், 95; தமிழ்நாடு ஜெயின் சங்க முன்னாள் செயலர். இவரது மனைவி சரஸ்வதி இறந்து விட்டார். இவருக்கு, இரு மகள்கள் உள்ளனர்.சமண மதத்தை பின்பற்றி வந்த அவர், மோட்சமடைய, கடந்த மாதம், அவரது சொந்த கிராமத்தில், சல்லேகன் விரதம்
 மோட்ச விரதமிருந்த ஜெயின் முதியவர் மரணம்

வந்தவாசி : சல்லேகன் விரதமிருந்த, 95 வயது ஜெயின் முதியவர் மரணமடைந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பறம்பூரைச் சேர்ந்தவர், சிம்மசந்திர ஜெயின் சாஸ்திரியார், 95; தமிழ்நாடு ஜெயின் சங்க முன்னாள் செயலர். இவரது மனைவி சரஸ்வதி இறந்து விட்டார். இவருக்கு, இரு மகள்கள் உள்ளனர்.சமண மதத்தை பின்பற்றி வந்த அவர், மோட்சமடைய, கடந்த மாதம், அவரது சொந்த கிராமத்தில், சல்லேகன் விரதம் மேற்கொள்ள திட்டமிட்டார்.

கடந்த, 7ம் தேதி, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த விசாகாச்சாரியார் தபோ நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட அவர், அங்கு விரதத்தை தொடர்ந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, அவர் மரணமடைந்தார். இதையடுத்து, தேங்காய் நாரில், அவரது உடல் எரியூட்டப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X