இந்த செய்தியை கேட்க
புதுடில்லி: டில்லி மக்கள், ஆட்சி பீடத்தில் தாமரையை வைக்காமல், துடைப்பத்தை வைத்துவிட்டனர் என பாஜ., மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
டில்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் துடைப்பம் சின்னத்தில் போட்டியிட்ட ஆம்ஆத்மி 63 இடங்களிலும், தாமரை சின்னத்தில் போட்டியிட்ட பாஜ., 7 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. இதனால் தொடர்ந்து 3வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பொறுப்பேற்கிறார். ஆம்ஆத்மியின் வெற்றிக்கு பல அரசியல் கட்சித்தலைவர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் எம்.பி.,யும் பாஜ., மூத்த தலைவருமான இல.கணேசன், டில்லி தேர்தல் முடிவுகள் குறித்து கூறியதாவது:

ஜனநாயகத்தில் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்கிறோம். டில்லி தேர்தல் முடிவுகள் பாஜ.,விற்கு பின்னடைவு இல்லை. கடந்த தேர்தலுடன் ஒப்பிட்டு பார்க்கையில் கூடுதல் இடங்களில் பாஜ., வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியில் இருக்கும் ஆம்ஆத்மி, இலவசங்களை அள்ளி கொடுத்துள்ளது. ஆட்சி பீடத்தை ராஜ்ய லட்சுமி என்பார்கள். அந்த பீடத்தில் டில்லி மக்கள் தாமரையை வைக்காமல், துடைப்பத்தை வைத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE