காஞ்சிபுரம் காஞ்சிபுரம் வேகவதி ஆற்றின் ஓரம், பிடிப்பு இல்லாமல் நிற்கும் மின்கம்பத்தால், விபத்து ஏற்படுமோ என, பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில், வேளிங்கப்பட்டரை அருகில், காமராஜர் நகர் உள்ளது.இங்குள்ள, 25க்கும் மேற்பட்ட வீடுகளின் மின் இணைப்புக்காக, வேகவதி ஆற்றின் ஓரம், மின் கம்பம் நடப்பட்டு உள்ளது.கன மழையின் போது, வேகவதி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளநீரால், மின் கம்பத்தை சுற்றிலும் இருந்த மண்குவியல் அடித்துச் செல்லப்பட்டது. தற்போது, அடிப்பகுதியில் உள்ள பீடத்தின் உதவியுடன் மட்டுமே, மின் கம்பம் நிற்கிறது.இதனால், பலத்த காற்று வீசும்போது, மின் கம்பம் சாய்ந்துவிடுமோ என, பொதுமக்கள் அச்சம்அடைந்து உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE