பரங்கிப்பேட்டை:காவிரி டெல்டா மாவட்டத்தை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதல்வருக்கு, நன்றி தெரிவித்து, பரங்கிப்பேட்டையில், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.காவிரி டெல்டா மாவட்டத்தை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதை வரவேற்று பரங்கிப்பேட்டையில் ஹைட்ரோ கார்பன் விழிப்புணர்வு குழு சார்பில், பொதுமக்களுக்கு, இனிப்பு வழங்கப்பட்டது.குழு தலைவர் அருள்முருகன் தலைமை தாங்கினார். முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா, குமார், காந்தி, சீனு, சிவனேசன், அசோக் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE