கோவை : கோவையில் நடந்து வரும் தேசிய அளவிலான, 'ஹீரோ ஐ லீக்' கால்பந்து போட்டியில், கோகுலம் கேரளா அணி வெற்றி பெற்றது.
அகில இந்திய கால்பந்து சம்மேளனம் (ஏ.ஐ.எப்.எப்.,) சார்பில், தேசிய அளவில், 'ஹீரோ ஐ லீக்' போட்டி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்கிறது. தலைசிறந்த, 11 அணிகள் பங்கேற்கின்றன. போட்டிகள் அனைத்தும், 'லீக்' முறையில் நடக்கின்றன.கோவை, நேரு ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில், நடப்பு சாம்பியன் சென்னை சிட்டி அணி மற்றும் கோகுலம் கேரளா அணிகள் மோதின.ஆட்டம் தொடங்கியது முதலே, இரு அணி வீரர்களும், 'கோல்' அடிக்க போராடினர். முதல் பாதி, கோல் எதுவுமின்றி சமநிலை யில் முடிந்தது. இரண்டாம் பாதியில், இரு அணி வீரர்களும், ஆக்ரோஷமான ஆட் டத்தை வெளிப்படுத்தி, கோல் அடிக்க முயன்றனர்.
ஆட்டத்தின், 77வது நிமிடத்தில், கோகுலம் கேரளா அணியின் கேப்டன் மார்க்கஸ், முதல் கோல் அடித்து அசத்தினார். ஆட்ட நேர முடிவில், கோகுலம் கேரளா அணி, 1--0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சிறந்த வீரராக, கோகுலம் கேரளா அணியின் கேப்டன் மார்க்கஸ் தேர்வு செய்யப்பட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE