திண்டுக்கல் திண்டுக்கல்லில் விபத்து வழக்கில் நஷ்ட ஈடு வழங்காத அரசு பஸ்சை நீதிமன்ற பணியாளர்கள் ஜப்தி செய்தனர். திண்டுக்கல் கோவிந்தாபுரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் 56. இவர் 2015ல் மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலைம் அருகே நடந்து செல்லும் போது அரசு பஸ்மோதி காயமடைந்தார். நஷ்டஈடு வழங்ககோரி திண்டுக்கல் சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இழப்பீட்டு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரை போக்குவரத்து கழகம் காலதாமதம் செய்ததால் வட்டியுடன் சேர்த்து ரூ.5 லட்சத்து 44ஆயிரம் வழங்க மனுத் தாக்கல் செய் தனர். விசாரித்த சிறப்பு சார்பு நீதிமன்ற நீதிபதி சுதாகர் உத்தரவின் பேரில், திண்டுக்கல் பஸ்நிலையத்தில் நின்றிருந்த மதுரை போக்குவரத்து கழக பஸ்சை நீதிமன்ற பணியாளர்கள் ஜப்தி செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE