ஒட்டன்சத்திரம், ஒட்டன்சத்திரம் நகராட்சி குப்பையை கொல்லபட்டி குளத்தில் கொட்டுவதற்கு, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாகனத்தை சிறைபிடித்தனர். ஒட்டன்சத்திரம் நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. தினமும் 20 டன்னுக்கும் அதிகமாக குப்பை சேர்கிறது. இந்த நகராட்சியின் பரிதாபம், குப்பை கொட்டுவதற்கென சொந்தமாக ஒரு இடம் இல்லாததே. இதனால் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரித்து விவசாயிகளுக்கு கொடுக்கப்படுகிறது.உரம் தயாரித்தது போக மீதமுள்ள குப்பையை, ஆங்காங்கே நகராட்சி கொட்டி வருகிறது. இதற்கும் அந்தந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கொல்லபட்டி குளத்தில் குப்பை கொட்டப்பட்டு வந்தது. கொல்லபட்டி குளத்துப் பகுதியில் உள்ள போர்வெல் மூலம் குடிநீர் வினியோகம் நடக்கிறது.குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும் என்பதால், குப்பை கொட்டுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நகராட்சி நிர்வாகத்திடம் இது குறித்து பலமுறை தெரிவித்த பின்பும் இந்நிலை தொடர்ந்தது. நேற்று முன்தினமும் நகராட்சி வாகனம் குப்பை கொட்ட வந்தது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் வாகனத்தை சிறைபிடித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE