கடலுார்:வடலுார் அடுத்த கல்லுக்குழியை சேர்ந்தவர் சிவக்குமார்,40: கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜெயலட்சுமி. திருமணமாகி 20 ஆண்டாகும் இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.கடந்த 10ம் தேதி சிவக்குமார் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அதனை ஜெயலட்சுமி கண்டித்ததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. உடன் ஜெயலட்சுமி தனது பிள்ளைகளுடன் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார்.இதனால் விரக்தியடைந்த சிவக்குமார் வீட்டிலேயே துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். வடலுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE