பண்ருட்டி:பண்ருட்டி அருகே வயிற்று வலி காரணமாக கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.பண்ருட்டி அடுத்த சிறுவத்துாரைச் சேர்ந்தவர் பத்மநாபன், 50; கூலி தொழிலாளி. இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது. கடந்த 12ம் தேதி வலி அதிகமானதால், மனமுடைந்த அவர், பூச்சி மருந்தை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். புகாரின் பேரில், புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE