சூலுார்:சூலுார் மற்றும் பள்ளபாளையம் பேரூராட்சியில், தார் ரோடு போட, ரூ.5.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பள்ளபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பாரதிபுரம் மற்றும் காந்திநகர் பகுதிகளில் ரோடு அமைக்க, ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.பணிகளைத் துவக்க பூமி பூஜை நடந்தது. இதில், ஏராளமான முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.சூலுார் பேரூராட்சிக்குட்பட்ட கருப்ப தேவர் வீதி, இந்திரா நகர், தனலட்சுமி நகர், எஸ் ஆர்.எஸ்.புரம் ஆகிய பகுதிகளில், ரூ. 75 லட்சம் செலவில் தார் ரோடு அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது.சூலுார் எம்.எல்.ஏ., கந்தசாமி மற்றும் ஆளுங்கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE