சேலம்: சேலம், மன்னார்பாளையம் பிரிவு சாலை பகுதியைச் சேர்ந்தவர், நாகராஜ் மகன் மோகன், 36; அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த, ஏழாம் வகுப்பு படிக்கும், 12 வயது சிறுமியை, 2018 செப்டம்பரில், பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து தகவல் தெரிவித்தால், கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். சிறுமியின் பெற்றோர், அம்மா பேட்டை மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார்படி, போக்சோ சட்டத்தில், மோகன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு, சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று, மோகனுக்கு ஆயுள் சிறை, 25 ஆயிரம் அபராதம் விதித்து, நீதிபதி முருகானந்தம் உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE