வேலூர்: ஆம்பூர் அருகே, சொத்து தகராறில், கொழுந்தனாரை வெட்டி கொலை செய்த அண்ணியை, போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கம்ம கிருஷ்ணபள்ளியை சேர்ந்தவர் முருகேசன், 55; விவசாயி; இவருடைய மனைவி விஜயா, 40. முருகேசனின் அண்ணன் வெங்கடேசன், 57; இவரது மனைவி சித்ரா, 45. வெங்கடேசன் இறந்து விட்டதால் சித்ரா, தனது மகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், இவருக்கும் முருகேசனுக்கும் நிலத்தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு முருகேசனும் அவரது மனைவி விஜயாவும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, நள்ளிரவு, 12:00 மணிக்கு மேல், வீட்டினுள் புகுந்த சித்ரா, முருகேசனை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த விஜயாவையும், அரிவாளால் வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே முருகேசன் பலியானார். விஜயா படுகாயங்களுடன், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து, உமாராபாத் போலீசார் விசாரணை நடத்தி, சித்ராவை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE