வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருப்பூர்: திருப்பூரில் பாஜ.,வினர் நடத்தும் பேரணியின் போது தங்களின் பிரியாணி அண்டாவிற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கடை உரிமையாளர்கள் சிலர் போலீசில் புகார் மனு அளிக்க வந்தனர். போலீஸ் ஸ்டேஷனுக்கு முன்பு போட்டோவுக்கு போஸ் கொடுத்தவர்கள், மனு கொடு்க்காமலேயே கலைந்து சென்றனர்.
திருப்பூரில் காங்கேயம் ரோடு சிடிசி கார்னரில் நாளை (பிப்.,28) குடியுரிமை திருத்த சட்டத்திற்கு (சிஏஏ) ஆதரவாக பாஜ.,வினர் பேரணி நடத்த உள்ளனர். இதனால், அந்த பகுதியில் உள்ள பிரியாணி கடை உரிமையாளர்கள், திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் மனு அளிக்க வந்தனர். ஆனால் புகார் மனு அளிக்காமல் போலீஸ் ஸ்டேஷன் முன்பு நின்று போஸ் கொடுத்துவிட்டு, அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிட்டு கலைந்து சென்றனர்.

கோவையில் கடந்தாண்டு இந்து முன்னணி பொறுப்பாளரின் இறுதி ஊர்வலத்தின்போது கடைவீதிகளில் இருந்த பிரியாணி அண்டாவை திருடி சென்றனர். இது போன்ற சம்பவம் தங்களுக்கும் நேரக்கூடாது என மனு அளிக்க வந்ததாக கூறியவர்கள், ஏன் புகார் மனு அளிக்காமல் சென்றனர் என தெரியவில்லை.
ஆடுகளுக்கு பாதுகாப்பு
இந்நிலையில், இந்து முன்னணியின் திருப்பூர் மேற்கு மாநகர் பொதுச்செயலர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் அதே காவல் நிலையத்தில், சாலையில் திரியும் வாயில்லா ஜீவனான ஆடுகளுக்கு பாதுகாப்பு வேண்டும், என மனு அளித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE