பெங்களூரு :பாலியல் வழக்கில் சிக்கியுள்ள நித்யானந்தாவை கண்டுபிடிக்க, 'சர்ச் வாரன்ட்' பிறப்பித்து ராம்நகர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

பிடதி ஆஸ்ரமத்தை சேர்ந்த நித்யானந்தா மீது, ராம்நகர் மாவட்ட மூன்றாவது செஷன்ஸ் நீதிமன்றத்தில் பாலியல் வழக்குவிசாரணை நடந்து வருகிறது. விசாரணையின் போது, நேரில் ஆஜராவதற்கு அளிக்கப்பட்ட விலக்கு மற்றும் ஜாமின் சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, 19ல்,அவருக்கு கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது.அவர் எங்குள்ளார் என்பது தெரியாததால், சர்ச் வாரன்ட் பிறப்பிக்கும்படி, சி.ஐ.டி., போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இம்மனு நீதிபதி சித்தலிங்க பிரிவு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சர்ச் வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த வாரன்டுக்கு குறிப்பிட்ட கால கெடு எதுவுமில்லை. நித்யானந்தாவுக்கு உத்தரவாதம் அளித்த நபரை கைது செய்யவும், அவர் உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE