புதுடில்லி: பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்க பிரதமர் மோடி இன்று(பிப்.,29) உத்திரபிரதேசம் செல்கிறார்.
உ.பி. டில்லி இடையே 296 கி.மீ. தொலைவிற்கு பந்தல்கண்ட் எக்ஸ்பிரஸ் சாலைக்கான திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும், பிரயாக் ராஜ் நகரில் சமாஜிக் அதிகாரிதா ஷவிர் திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், 10 ஆயித்திற்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகளுக்கான பல்வேறு நல திட்டங்கள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இந்த விழாக்களில் பங்கேற்று பயனாளிகளுக்கு வழங்க இன்று உ.பி. மாநிலம் செல்கிறார் பிரதமர் மோடி.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE