எக்ஸ்குளுசிவ் செய்தி

பட்டா சரிபார்ப்புக்கான, 'ஆன்லைன்' சேவை முடக்கம்

Updated : பிப் 29, 2020 | Added : பிப் 28, 2020 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை :நில பட்டா உள்ளிட்ட, வருவாய் துறை ஆவணங்களை, ஆன்லைன் முறையில் சரி பார்ப்பதற்கான, இ - சேவை இணையதளம் முடங்கியதால், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். தமிழகத்தில், நிலங்களின் பட்டா பதிவேடு உள்ளிட்ட ஆவணங்கள், ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. கணினி வாயிலாக வழங்கப்படும் புதிய ஆவணங்கள், உடனுக்குடன் வருவாய் துறையின், இ - சேவைகள் இணையதளத்தில் பதிவேற்றம்
 பட்டா சரிபார்ப்புக்கான, 'ஆன்லைன்' சேவை முடக்கம்

சென்னை :நில பட்டா உள்ளிட்ட, வருவாய் துறை ஆவணங்களை, ஆன்லைன் முறையில் சரி பார்ப்பதற்கான, இ - சேவை இணையதளம் முடங்கியதால், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.



தமிழகத்தில், நிலங்களின் பட்டா பதிவேடு உள்ளிட்ட ஆவணங்கள், ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. கணினி வாயிலாக வழங்கப்படும் புதிய ஆவணங்கள், உடனுக்குடன் வருவாய் துறையின், இ - சேவைகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.


பொதுமக்கள், தங்கள் நிலங்களுக்கான பட்டா உள்ளிட்ட ஆவணங்களை, இந்த இணையதளத் தில் சரி பார்த்துக் கொள்ளலாம். இணை தளத்தில் இருந்தே, ஆவணங்களை பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம். அலுவலகத்திற்கு அலைய வேண்டியதில்லை என்பதால், இந்த வசதி பொதுமக்களுக்கு பேருதவியாக உள்ளது.



இந்நிலையில், சமீப காலமாக, இந்த இணையதளம் அடிக்கடி முடங்கி விடுகிறது. சில தினங்களாக மொத்தமாக முடங்கியுள்ளது. இணையதளத்தின் முதல் பக்கத்தில், 'இந்த தளம் தற்போது, உங்கள் கோரிக்கையை செயல்படுத்த முடியாத நிலையில் உள்ளது.



சிறிது நேரம் கழித்து முயற்சிக்கவும்...' என்ற, குறிப்பு மட்டுமே உள்ளது.இதனால், பகல் நேரத்தில் இந்த சேவையை பயன்படுத்த முடியாமல், பொதுமக்கள் கடுமையான அவதிக்கு ஆளாகின்றனர்.பொதுமக்கள் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், இணையதளத்தின் திறனை மேம்படுத்த, வருவாய் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, பொதுமக்களின் கோரிக்கை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

murali - Chennai,இந்தியா
29-பிப்-202017:27:14 IST Report Abuse
murali சில மாவட்டங்கள் மட்டும் அதுவும் நகர்புறங்கள் மட்டுமே கடந்த பல மாதங்களாக தரவுகளை தருகின்றது. தேனீ ராமநாதபுரம் போன்ற மாவட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்க படுகின்றது . ஒன்லைன் தரவுகளை நாமாக தரவிறக்கம் செய்து இருந்த தரவுகளும் தற்சமயம் ஒன்லைன் முறையில் கிடைக்க வில்லை என்பது கூடுதல் குறிப்பு
Rate this:
Cancel
29-பிப்-202010:27:46 IST Report Abuse
நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே) அது ஏன் அடிக்கடி முடங்குகிறது? கடைசி வரை காரணம் எதுவும் சொல்ல மாட்டார்கள். ஏனென்றால், அப்போதுதான் நேரத்தை விரயமாகி கட்டிங் வாங்க முடியும். லஞ்ச ஊழலுக்காக இது போன்ற அரசு சேவைகள் வேண்டுமென்றே திட்டமிட்டு முடக்கப்படுகின்றன. இதில் அதிகாரிகள் பலர் உடந்தை. யாரேனும் மறுக்க முடியுமா?
Rate this:
Cancel
Sathiamoorthy.V - Kalpakkam,இந்தியா
29-பிப்-202009:58:04 IST Report Abuse
Sathiamoorthy.V பாதி மனை ஆயிரத்து இருநூறு சதுர அடி உண்மைப்பட்டாவை கணினியில் முழுமனையாக இரண்டாயிரத்து நானூறு சதுர அடி என பதிவேற்றம் செய்து இருக்கிறார்கள் . மனு கொடுத்தும் இன்னும் மாற்ற இல்லை ஏற்கனவே காகித நகல்களில் குளறுபடி இதில் கணினி ஆட்களும் புகுந்து விளையாடுகிறார்கள் . வில்லங்க சான்றிதழ் கேட்கும் சமயம் கணினியில் தேட வேண்டுமா அல்லது பதிவேடுகளில் தேட வேண்டுமா என கேட்கிறார்கள் . அப்படி எனில் கணினியை நம்ப முடியாது . குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்கும் கணினி ஒப்பந்த ஊழியர்கள் தன பங்கிற்கு தவறுகளை புரிகிறார்கள் . தவறுகளுக்கு தண்டனை கொடுக்கும் வரை இவர்கள் திருந்த மாட்டார்கள் .இதில் சர்வர்கள் பழுது , ஹேக்கர்கள் பிரச்சினை , வைரசு பிரச்சினைகளை சமாளிக்க தெரியாதவர்கள் கையில் நிர்வாகம் . வருவாய் துறை பதப்படுத்த படவேண்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X