இந்த செய்தியை கேட்க
புதுடில்லி: டில்லியில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காங்., அல்லாத எதிர்கட்சியினர், ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
திமுக, ஆம் ஆத்மி, தேசியவாத காங்., மார்க்சிஸ்ட், இ.கம்யூ., ராஷ்டிரிய ஜனதாதளம், லோக் தந்ரிக் ஜனதா ஆகிய கட்சியினர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு கடிதம் எழுதி உள்ளனர்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: டில்லியில் அமைதி திரும்ப தேவையான நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட வேண்டும். வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியவர்கள், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிய வேண்டும். டில்லி கலவரம் தொடர்பாக நேரில் பேச, நேரம் ஒதுக்க வேண்டும். வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மக்களை சந்தித்து அவர்களுக்கு நம்பிக்கை அளிக்க எதிர்கட்சிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE