சிவகங்கை : கரூர் முதல் ராமநாதபுரம் வரை 8 மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் காவிரி- -குண்டாறு - வைகை நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டுவதாக உறுதி அளித்துள்ளார்,'' என சிவகங்கையில் அமைச்சர் பாஸ்கரன் பேசினார்.
சிவகங்கையில் மறைந்த முதல்வர் ஜெ., பிறந்த நாள் மற்றும் தமிழக பட்ஜெட் விளக்க கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். நகர் செயலாளர் ஆனந்தன் வரவேற்றார். அமைச்சர் பாண்டியராஜன் சிறப்புரை ஆற்றினார்.எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளர் கருணாகரன், நாகராஜன் எம்.எல்.ஏ., மாநில மாணவரணி செயலாளர் ஆசைதம்பி, மாவட்ட செயலாளர் என்.எம்.,ராஜா, சிவகங்கை ஊராட்சி ஒன்றிய தலைவர் மஞ்சுளா, துணை தலைவர் கேசவன் உட்பட மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.
காவிரி- குண்டாறு நதிநீர் வரும்: அமைச்சர் பாஸ்கரன் பேசியதாவது, மறைந்த முதல்வர் ஜெ., தன் வாழ்நாள் முழுவதும் நலத்திட்டம் வழங்கியவர். முல்லைபெரியாறு, காவிரி நீர் பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை பாதுகாத்து சரித்திரம் படைத்தார். ராமநாதபுரத்தில் இன்று புதிய மருத்துவ கல்லுாரி அடிக்கல் நாட்டு விழாவிற்கு முதல்வர் பழனிச்சாமி வருகிறார். மானாமதுரையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்.காவிரி- குண்டாறு--வைகை நதிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார், என்றார். கிளை நிர்வாகி காஜா மைதீன் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE