இந்த செய்தியை கேட்க
கொழும்பு: 'இலங்கை நாடாளுமன்றத்தை இன்று (மார்ச் 1) நள்ளிரவில் அதிபர் கோத்தபய ராஜபக்சே கலைக்கக் கூடும்' என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மத குருவிடம் ஆலோசனை நடத்தினார்.
![]()
|
இலங்கை நாடாளுமன்றத்தை கலைக்க, எதிர்க்கட்சிகள் போதுமான ஆதரவை தரவில்லை. இந்நிலையில் 'இன்றுடன் நான்கரை ஆண்டுகள் நிறைவடைவதால், இன்று நள்ளிரவில் நாடாளுமன்றம் கலைக்கப்படக் கூடும்' என, எதிர்பார்க்கப்படுகிறது.
![]()
|
அவர், 'இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான நல்ல நேரம் இன்று இல்லை' என, தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், ஓரிரு நாளில் நாடாளுமன்றத்தை கலைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் நடந்த போர்க்குற்றம் குறித்து விசாரிப்பதற்கான, ஐ.நா., தீர்மானத்தில் இருந்து இலங்கை அரசு தற்போது விலகியிருக்கிறது. இதனால், பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, மீண்டும் தேர்தல் நடந்தால், இலங்கையில் அரசியல் மாற்றம் வரும் என, எதிர்க்கட்சிகள் எதிர்பார்க்கின்றன.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement