வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியினால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்திய போது, மேதைகள் கலால் வரியை உயர்த்துகின்றனர் என காங்., முன்னாள் தலைவர் ராகுல் விமர்சித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சமீபகாலமாக சரிவடைந்து வருகிறது. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றப்பட்டாலும், விலை கடுமையாக வீழ்ந்தாலும் ஓரளவே குறைக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.3 என அதிரடியாக உயர்த்தியது. இதற்கு காங்., உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்தநிலையில் காங்., முன்னாள் தலைவர் ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்பதன் மூலம், உலகளாவிய எண்ணெய் விலை வீழ்ச்சியின் பயன் இந்திய நுகர்வோருக்கு சென்று சேர வேண்டும் என பிரதமரிடம் கடந்த 3 நாட்களுக்கு முன்னதாகக் கூறியிருந்தேன். ஆனால், என்னுடைய அறிவுரையைக் கேட்பதற்குப் பதிலாக, நமது மேதைகள், என்ன செய்தார்கள் தெரியுமா, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்திவிட்டார்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Just 3 days ago I had requested @PMOIndia to pass on the benefit of the global oil price crash to Indian consumers, by slashing the prices of petrol & diesel in India. Instead of heeding this advice, our genius has gone and hiked #exciseduty on fuel! pic.twitter.com/lGEQosS9JE
— Rahul Gandhi (@RahulGandhi) March 15, 2020
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE