கடலுார்:கலெக்டர் தலைமையில் வாரந்தோறும் நடைபெறும் பொது மக்கள் குறைதீர்வு முகாம் வரும் 31ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து கலெக்டர் அன்புச்செல்வன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு; கொரோனா வைரஸ் நோய் முன்னெச்சரிக்கை காரணமாக கடலுார் மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் வாரந்தோறும் திங்கள் கிழமையில் நடைபெறும் பொது மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம், மனுநீதி நாள் முகாம்கள் வரும் 31ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE