ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு, நவமலை பழங்குடியின மக்களுக்கு, 'கொரோனா' வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, வனத்துறையினர் பயிற்சி அளித்தனர்.பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு சின்னாறுபதி, நவமலை செட்டில்மென்டுகளில் வனத்துறையினர், 'கொரோனா' வைரஸ் தடுப்பு முகாம் நடத்தினர்.ஆனைமலை புலிகள் காப்பக உதவி வனப்பாதுகாப்பு காவலர் செல்வம், வனச்சரக அலுவலர் காசிலிங்கம் தலைமையிலான வனத்துறையினர், பழங்குடியினருக்கு 'கொரோனா' வைரஸ் குறித்தும், பரவும் முறை, பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தனர். மேலும், கை கழுவும் முறை குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.ஆழியாறு சோதனைச்சாவடியில், வால்பாறை செல்லும் மக்கள், பஸ் டிரைவர்களுக்கு 'கொரோனா' வைரஸ் குறித்த தகவல்கள் குறித்த துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதேபோல், டாப்சிலிப்பில் வனச்சரக அலுவலர் சக்திவேல் தலைமையிலான அதிகாரிகள், செட்டில்மென்ட்டிலும், பஸ் டிரைவர்கள், பயணிகளிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE