இடைப்பாடி: சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்திலுள்ள, திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க கிளையில், சனிதோறும் பருத்தி ஏலம் நடந்து வருகிறது. அதில், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஏராளமான விவசாயிகள், பருத்தியை விற்பனைக்கு கொண்டு வருவர். அதை வாங்க, கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, வேலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் பங்கேற்பர். நேற்று நடக்கவிருந்த ஏலம், கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ரத்து செய்யப்பட்டது. இதையறியாமல், பல்வேறு மாவட்டங்களிலிருந்து பலர், பருத்தியை கொண்டுவந்து விட்டு, ஏமாற்றத்துடன் திரும்பினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE