சேலம்: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த, குப்பனூரைச் சேர்ந்த அர்த்தனாரி மகன் ராஜேந்திரன், 47. இவர் மீது, கொலை மிரட்டல் உள்பட மூன்று பிரிவில் வழக்குப்பதிந்து கைது செய்த ஏரியூர் போலீசார், கடந்த பிப்., 2ல் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மறுநாள் உடல்நலம் பாதிக்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து, மூன்று நாள் சிகிச்சை பெற்றார். பின், மீண்டும் சிறைக்கு சென்றவர், அவ்வப்போது, வெளிப்புற நோயாளியாக சிகிச்சை பெற்று திரும்பினார். நேற்று காலை, 6:20 மணிக்கு, விசாரணை கைதிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவரை, உடனடியாக, சிறை போலீசார், சிகிச்சைக்கு அழைத்து வந்தனர். பரிசோதித்த, சேலம், அரசு மருத்துவமனை மருத்துவர், கைதி இறந்ததாக தெரிவித்தார். நுரையீரல் தொற்று, வலிப்பு நோய், ரத்த அழுத்தத்தால், கைதி இறந்தது தெரிந்தது. இதுதொடர்பாக, மாஜிஸ்திரேட், இன்று, விசாரித்த பின், பிரேத பரிசோதனை நடத்தப்படும் என, மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE