ஊட்டி:'கொரோனா' முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போலீசாருக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.மாவட்ட எஸ்.பி., சசிமோகன் வெளியிட்டுள்ள அறிக்கை:நீலகிரியில், உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்கள், சிறப்பு பிரிவுகள் ஆயுதப்படை மற்றும் அனைத்து போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வரும் அனைத்து அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முக கவசம் உட்பட பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.மேலும், போலீஸ் குடியிருப்பு சுற்றியுள்ள பகுதிகளில் நகராட்சி, பேரூராட்சி உதவியுடன் வைரஸ் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. போலீசார் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் தாங்கள் வசிக்கும் இடங்களை சுகாதாரமாக வைத்து கொள்வதுடன் தாங்களும் தங்களது குழந்தைகளும் முக கவசம் அணிந்து சுகாதாரமாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE