கூடலுார்:கூடலுார் எல்லையை ஒட்டிய சோதனை சாவடிகளில், வெளிமாநில வாகனங்களை தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பும் பணி தொடர்கிறது.நீலகிரியில், கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க, மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறது.கூடலுாரை ஒட்டிய மாநில எல்லைகளில், அரசு துறையினர் ஒருங்கிணைந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகள் வாகனங்களை மட்டும், எல்லையில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வந்தனர்.இந்நிலையில், கடந்த இரு நாட்களாக, 24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பு பணிகள் தொடர்கிறது. காய்கறி, பால், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.அதிகாரிகள் கூறுகையில்,'அரசு உத்தரவுப்படி அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களை தவிர்த்து, மற்ற அனைத்து வாகனங்களும் மாநில எல்லையில் நிறுத்தப்பட்டு, திரும்பி அனுப்பும் பணி தொடர்கிறது. அதிகாரிகளின் அடுத்து உத்தரவு வரும் வரை, இந்த பணி தொடரும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE