கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி பராமரிப்பு குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்கவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவ, மாணவியர்கள் பயன்படுத்தும் கழிப்பறைகள் சுத்தம் செய்யாமல் இருந்து வந்தது. இதனால், மாணவியர்கள் கழிப்பறையை பயன்படுத்தாமல், வீட்டுக்கு சென்று கழிப்பறையை பயன்படுத்துகின்றனர். இதனால், மாணவிகளுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்படுகிறது.இதுகுறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்விகள் கேட்டப்பட்டது.அதற்கு, பள்ளியில் இருந்து, மாணவ, மாணவியர்களுக்கு தலா ஐந்து கழிப்பறை வசதியுள்ளது என்றும்; பராமரிக்கும் ஊழியர்களுக்கு, 5,500 ரூபாய் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் வழங்கப்படுகிறது என்றம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், கழிப்பறையை சுத்தம் செய்ய ஊழியர் பணியில் இல்லை. பெற்றோர் ஆசிரியர் சங்க நிதியில் இருந்து கழிப்பறை சுத்தம் செய்ய, 2018 - 19, 2019 - 20ம் ஆண்டில் செலவு செய்யவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாணவ, மாணவியர்களின் நலன் கருதி கழிப்பறையை சுத்தம் செய்ய மாவட்ட கல்வி அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE