அரூர்: வெளிமாநிலங்களில் இருந்து, அரூர் பகுதிக்கு வந்துள்ளவர்கள் குறித்து, கணக்கெடுக்கும் பணியில், வருவாய் மற்றும் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதிலிருந்து, பொதுமக்கள் தங்களை தற்காத்து கொள்வது பற்றி, அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் தனிமை படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் உள்ளனர். மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பை தகவல் தெரிவிக்க வேண்டிய தொற்று நோயாக, தமிழக அரசு அறிவித்துள்ளது. தர்மபுரி மாவட்டம், அரூர் பகுதியிலிருந்து, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு கூலிவேலைக்கு சென்ற தொழிலாளர்கள், கொரோனா வைரஸ் பாதிப்பால், தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ளனர். இந்நிலையில், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து கடந்த, 15 நாட்களுக்கு முன், 1,700க்கும் மேற்பட்டோர், தங்கள் சொந்த ஊருக்கு வந்துள்ளதாகவும், அவர்கள் குறித்த விபரங்களை கணக்கெடுக்கும் பணியில், வருவாய்த்துறையினருடன் இணைந்து, சுகாதாரதுறையினர் ஈடுபட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE