சிறுசேமிப்பு திட்டங்களுக்கு வட்டியை குறைத்தது தவறு: சிதம்பரம்

Updated : ஏப் 02, 2020 | Added : ஏப் 02, 2020 | கருத்துகள் (72) | |
Advertisement
சென்னை: சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை மத்திய அரசு குறைத்துள்ளது தவறான முடிவு என காங்., முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் குற்றம் சாட்டி உள்ளார்.சிறுசேமிப்பு திட்டங்கள், தொழிலாளர் வைப்பு நிதி உள்ளிட்டவற்றின் வட்டியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது ஏப்.,1 முதல் நடைமுறையானது. இது தவறான முடிவு என சிதம்பரம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர்
Chidambaram slams govt over interest rate cutசிறுசேமிப்பு திட்டங்களுக்கு வட்டியை குறைத்தது தவறு: சிதம்பரம்

சென்னை: சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை மத்திய அரசு குறைத்துள்ளது தவறான முடிவு என காங்., முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் குற்றம் சாட்டி உள்ளார்.

சிறுசேமிப்பு திட்டங்கள், தொழிலாளர் வைப்பு நிதி உள்ளிட்டவற்றின் வட்டியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது ஏப்.,1 முதல் நடைமுறையானது. இது தவறான முடிவு என சிதம்பரம் தெரிவித்துள்ளார்.



latest tamil news


இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: சிறுசேமிப்பு திட்டங்கள், தொழிலாளர் வைப்பு நிதி உள்ளிட்டவற்றின் வட்டியை மத்திய அரசு குறைத்தது பொருளாதார அடிப்படையில் சரியாக இருக்கலாம் ஆனால், அது செயல்படுத்தப்பட்ட நேரம் முற்றிலும் தவறானது. தற்போதைய இக்கட்டான நிலையில், தங்கள் சேமிப்புக்கான வட்டியையே மக்கள் நம்பி உள்ளனர். வட்டியை குறைக்க வழங்கப்பட்ட அறிவுரை முட்டாள்தனமானது. அதனை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். பழைய வட்டியே தொடர வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (72)

muthu Rajendran - chennai,இந்தியா
02-ஏப்-202023:41:20 IST Report Abuse
muthu Rajendran போஸ்ட் ஆபீசே இயங்குவது சிறு சேமிப்பு திட்டங்களால் தான் இந்த சேமிப்பு வட்டியை குறைத்தால் சாதாரண மக்கள் பதிவு பெறாத தனியார் சேமிப்பு திட்டங்களில் சேர்ந்து பாதிக்கப்பட நேரிடும் BSNL மாதிரி போஸ்ட் ஆபிஸை ஆக்கிடாதீங்க முடிவை மாற்றி ஏழை முதியவர்களுக்கு உதவுங்கள்
Rate this:
Cancel
Rajesh - Chennai,இந்தியா
02-ஏப்-202022:52:45 IST Report Abuse
Rajesh ஏன்யா சும்மா பேசி பாவத்தை சேர்த்துக்கொள்வது மட்டுமில்லாமல் உன் சந்ததியருக்கும் சேர்க்குற? ஏழைகளின் இன்றய நிலைமை உங்களுக்கு தெரியுமா?
Rate this:
Cancel
m.viswanathan - chennai,இந்தியா
02-ஏப்-202022:05:56 IST Report Abuse
m.viswanathan இவரை எதற்கு சிறையில் வைத்தார்கள் , ஏன் வெளியே விட்டார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X