கொரோனா சோதனை: சுகாதார பணியாளர்கள் மீது தாக்குதல்

Updated : ஏப் 02, 2020 | Added : ஏப் 02, 2020 | கருத்துகள் (39) | |
Advertisement
இந்தூர்: மத்திய பிரதேசத்தில் கொரோனா பரிசோதனைக்காக சென்ற டாக்டர்கள் உள்ளிட்டசுகாதார பணியாளர்கள் மீது பொது மக்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்னர். இதில் 2 பேர் காயமடைந்தனர்.மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு கொரோனா உள்ளதா என, சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தினர்.
Covid-19: Health workers attacked, chased away in Indoreகொரோனா சோதனை: சுகாதார பணியாளர்கள் மீது தாக்குதல்

இந்தூர்: மத்திய பிரதேசத்தில் கொரோனா பரிசோதனைக்காக சென்ற டாக்டர்கள் உள்ளிட்ட

சுகாதார பணியாளர்கள் மீது பொது மக்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்னர். இதில் 2 பேர் காயமடைந்தனர்.



மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு கொரோனா உள்ளதா என, சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தினர். டட்பதி பாகல் பகுதியிலும் 2 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனால், அந்த பகுதி தனிமைபடுத்தப்பட்டுள்ளது.


latest tamil news


அந்த பகுதிக்கு ஆய்வுக்கு சென்ற சுகாதார பணியாளர்கள் மீது அப்பகுதி மக்கள், கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், அவர்கள் அலறியடித்து ஓடினர். இதில் 2 பெண் டாக்டர்களுக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (39)

Navaneetha krishnan - Vedasandur,இந்தியா
02-ஏப்-202020:55:52 IST Report Abuse
Navaneetha krishnan நீங்க கலக்குங்க, உங்களுக்கு முட்டு கொடுக்க இங்க நிறைய பேர் இருக்காங்க
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
02-ஏப்-202018:39:40 IST Report Abuse
Bhaskaran இவர்களை எந்தவிதத்தில்சேர்ப்பது
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
02-ஏப்-202018:21:55 IST Report Abuse
Lion Drsekar இது போன்ற செயல்பாடுகளுக்கு அரசியல் கட்சிகள் தான் முன்னுதாரணம், எல்லா புகழும் அவர்களுக்கே. இதை பார்த்து செயல்படுபவர்கள் பின்னணி இல்லாத தனிமரங்கள்தான் பாவம், காவல் துறையினருக்கு முழு சுதந்திரம் கொடுத்தால் சிறைச்சாலைகளுக்கும் நீதிமன்றங்களுக்கு வேலையே இருக்காது, வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X