கொரோனாவை வைத்து மலிவான அரசியல் செய்கிறது காங்.,

Updated : ஏப் 02, 2020 | Added : ஏப் 02, 2020 | கருத்துகள் (30) | |
Advertisement
புதுடில்லி: கொரோனா வைரசை வைத்து காங்., மலிவான அரசியல் செய்வதுடன் மக்களை தவறாக வழி நடத்துகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அமித்ஷா கூறி இருப்பதாவது: பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் கொரோனாவை எதிர்த்து போராட பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகின்றன. இது உள்நாட்டில் மட்டுமல்லாது உலகளவிலும் பாராட்டை பெற்று வருகிறது.

புதுடில்லி: கொரோனா வைரசை வைத்து காங்., மலிவான அரசியல் செய்வதுடன் மக்களை தவறாக வழி நடத்துகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.



latest tamil news


இது குறித்து அமித்ஷா கூறி இருப்பதாவது: பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் கொரோனாவை எதிர்த்து போராட பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகின்றன. இது உள்நாட்டில் மட்டுமல்லாது உலகளவிலும் பாராட்டை பெற்று வருகிறது. கொரோனாவை விரட்டியடிக்க 130 கோடி இந்தியர்கள் ஒன்றுபட்டுள்ளனர்.

இந்நிலையில் காங்கிரஸ் இதிலும் மலிவான அரசியல் செய்வது சரியல்ல. அவர்கள் மக்களை தவறாக வழி நடத்துவதற்கு பதிலாக தேசிய நலனை பற்றி சிந்திக்க வேண்டும். இவ்வாறு அமித்ஷா கூறி உள்ளார்.



latest tamil news


முன்னதாக காங் கட்சியினரிடையே வீடியோ கான்பரன்சிங்கில் பேசிய சோனியா மருத்துவ நிபுணர்களுக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் கிடைக்க வேண்டும்.உள்கட்டமைப்பு இல்லாததால் அல்லது ஆயத்தமாக இருப்பதால் தொற்று பரவல் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படாது என்பதை உறுதிசெய்வதற்கான பொறுப்பு அரசாங்கத்தின் மீது உள்ளது என்றும்,முன்னோடியில்லாத வகையில் சுகாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடியின் மத்தியில் நாடு உள்ளது அவர் கூறி இருந்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (30)

nizamudin - trichy,இந்தியா
03-ஏப்-202015:01:58 IST Report Abuse
nizamudin ஐயா ஊரில்தான் இருக்கிறாரா மக்களுக்கு நல்லது செய்ய
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
03-ஏப்-202004:27:19 IST Report Abuse
ஆரூர் ரங் இத்தாலியில் மனிதாபிமானம் கொடிகட்டிப் பறக்குது. வயதான கொரோனா நோயாளிகளை மருத்துவ மனைகள் அனுமதிப்பதில்லை. தெருக்களில் அனாதையாக சாகிறார்கள் இங்கு வராமலிருந்ருந்தால் நேரில் அனுபவித்திருக்கலாம்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
03-ஏப்-202004:10:28 IST Report Abuse
J.V. Iyer இத்தாலியர்களை இத்தாலிக்கு அனுப்புவதுதான் சரி. அவர்களுக்கு எங்கு என்ன வேலை?
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
03-ஏப்-202005:14:29 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்அப்போ அய்யருக்கு சிங்கப்பூரில் என்ன வேலை ? தஞ்சாவூருக்கு வந்துடுங்கோ சாமி.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X