புதுடில்லி: கொரோனா பாதிப்புக்கான பிரதமர் நிவாரண உதவிக்கு இஸ்ரோ ரூ. 5 கோடி வழங்க உள்ளது.
கொரோனா பாதிப்புக்கான நிவாரண உதவி வழங்க, மத்திய அரசு, PM-CARES Fund எனப்படும், குடிமக்கள் உதவி மற்றும் அவசர கால நிவாரண நிதியத்தை துவக்கியுள்ளது. இதில் திரட்டப் படும் தொகை, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும். இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, நிதியுதவி செய்யும்படி, கடந்த, 28ம் தேதி, கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதவில், கொரோனா தடுப்பு நடவடிக்கை்காக பிரதமர் நிவாரண உதவிக்கு இஸ்ரோ சார்பில் ஊழியர்களின் ஒரு நாள் ஊதியமாக மொத்தம் ரூ. 5 கோடியை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கும், மருந்து உபகரணங்கள் வாங்குவதற்கும் வழங்க உள்ளது. இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
With the voluntary contribution from employees of ISRO/DOS, more than 5 Crores INR was donated to PM-CARES Fund. ISRO is also working hard to develop essential medical devices that protect and help treat victims of COVID-19 pandemic.
Details: https://t.co/No43bcl7AD@PMOIndia
— ISRO (@isro) April 2, 2020