கொரோனாவுக்கு எதிரான போரில் ஷாருக்கான்| Dinamalar

கொரோனாவுக்கு எதிரான போரில் ஷாருக்கான்

Updated : ஏப் 02, 2020 | Added : ஏப் 02, 2020 | கருத்துகள் (8) | |
மும்பை: 'தனது குழு நிறுவனங்கள், கொரோனாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் 7 நிறுவனங்களுக்கு நன்கொடை அளிக்கும்' என பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் பரவி வரும் கொரோனாவை தடுக்க மத்திய அரசு பல்வேறு வழிகளில் போராடி வருகிறது. பிரதமர் அவசர கால நிவாரண நிதிக்கும், மாநில நிவாரண நிதிக்கும் பல்வேறு பிரபலங்களும் நிதி வழங்கி வருகின்றனர். இந்நிலையில்,
கொரோனாவுக்கு எதிரான போரில் ஷாருக்கான்

மும்பை: 'தனது குழு நிறுவனங்கள், கொரோனாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் 7 நிறுவனங்களுக்கு நன்கொடை அளிக்கும்' என பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பரவி வரும் கொரோனாவை தடுக்க மத்திய அரசு பல்வேறு வழிகளில் போராடி வருகிறது. பிரதமர் அவசர கால நிவாரண நிதிக்கும், மாநில நிவாரண நிதிக்கும் பல்வேறு பிரபலங்களும் நிதி வழங்கி வருகின்றனர். இந்நிலையில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான், 'தனது குழு நிறுவனங்களான, கோல்கட்டா நைட் ரைடர்ஸ், ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட், மீர் பவுண்டேஷன் மற்றும் ரெட் சில்லிஸ் விஎப்எக்ஸ் ஆகியவை 7 நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கும் என அறிவித்துள்ளார்.


latest tamil news



இதுகுறித்து, அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டதாவது: இந்த கடினமான காலத்தில், நீங்களும் உங்களை சுற்றியுள்ள அனைவரும் அயராது உழைக்க வேண்டும். உங்களுக்கு கூட தெரியாமல், உங்கள் தொடர்பு இல்லாதவர்கள் யாரிடமிருந்தும் தொற்று பரவலாம். யாரும் தனிமையாக இல்லை என்பதை அனைவரும் உணர, நாம் நமக்குள் சிறிதளவேனும் உறுதி செய்ய வேண்டும். இந்தியாவும் அனைத்து இந்தியர்களும் ஒரே குடும்பம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X