புதுடில்லி: காஸியாபாத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட, டில்லியில் மத பிரசங்க கூட்டத்தில் பங்கேற்ற, தப்லிக் - இ - ஜமாத் உறுப்பினர்கள், 6 பேர் மருத்துவமனைக்குள் நிர்வாணமாக சுற்றித்திரிவதாகவும், அநாகரிகமாக நடந்து கொள்வதாக புகார் எழுந்துள்ளது.
கடந்த மார்ச், 8 - 10ம் தேதிகளில், டில்லியில், நிஜாமுதீன் பகுதியில், தப்லிக் - இ - ஜமாத் அமைப்பின் தலைமை அலுவலகத்தில், மத பிரசங்க கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தை முடித்து அவர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்பி உள்ளதால், நாடு முழுவதும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், காஸியாபாத் எம்.எம்.ஜி. மருத்துவமனை சார்பில், போலீசுக்கு புகார் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா தொற்றுடன் காஸியாபாத் மருத்துவமனையில் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள, தப்லிக் ஜமாத் பங்கேற்பாளர்கள், ஆடைகளின்றி நிர்வாணமாக சுற்றித்திரிகின்றனர். மோசமான பாடல்களை கேட்கின்றனர். நர்ஸ்களிடம் அசிங்கமாக செய்கை செய்கின்றனர். ஊழியர்களிடம், சிகரெட் கேட்டு தொல்லை செய்கின்றனர். இவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மிகவும் கடினம். இவ்வாறு புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து நள்ளிரவில் விசாரணை நடத்திய போலீசார் 6 பேர் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்து அவர்களை வேறு மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE