ஏப்.,15க்கு பிறகு சர்வதேச விமானங்களுக்கு அனுமதி: மத்திய அரசு

Added : ஏப் 03, 2020 | கருத்துகள் (19) | |
Advertisement
புதுடில்லி: ஊரடங்கு முடிந்த பின்னர் ஏப்.,15ம் தேதிக்கு பிறகு சர்வதேச விமானங்கள் இந்தியா வர அனுமதி அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரும் 15ம் தேதிக்கு பிறகு சர்வதேச விமானங்கள் இந்தியா வர அனுமதிக்கப்படும். இருப்பினும், எந்தெந்த நாடுகளிலிருந்து

புதுடில்லி: ஊரடங்கு முடிந்த பின்னர் ஏப்.,15ம் தேதிக்கு பிறகு சர்வதேச விமானங்கள் இந்தியா வர அனுமதி அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.



latest tamil news



இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரும் 15ம் தேதிக்கு பிறகு சர்வதேச விமானங்கள் இந்தியா வர அனுமதிக்கப்படும். இருப்பினும், எந்தெந்த நாடுகளிலிருந்து விமானம் வரும் என்பது, சூழலுக்கு ஏற்றபடி அனுமதி வழங்கப்படும். வெளிநாடுகளிலிருந்து இந்தியர்களை அழைத்து வரும் விமானங்கள், ஊரடங்கு காலம் முடியும் வரை காத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



latest tamil news


முன்பதிவுக்கு அனுமதி:


இந்நிலையில் விமான போக்குவரத்து துறை செயலர் பிரதீப் சிங் கரோலா கூறுகையில், 'ஊரடங்கு முடிந்த பிறகு மேற்கொள்ளும் விமான பயணங்களுக்கான முன்பதிவுகளை விமான சேவை நிறுவனங்கள் ஏற்கலாம். ஒருவேளை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால், முன்பதிவு ரத்து செய்ய வேண்டியது வரும்' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (19)

msnarayanan - chennai,இந்தியா
08-ஏப்-202012:57:17 IST Report Abuse
msnarayanan இந்தியாவிலிருந்து சுற்றுலா விசா மூலம் தற்காலிகமாக வெளிநாடுகளுக்கு வந்துள்ள இந்தியன்ஸ் தாயகம் திரும்ப மத்திய அரசு விமான சேவை உடனடி ஏற்பாடு செய்தால் கோரோண பாதிப்புலிருந்து பலரை காப்பாற்ற முடியும். செய்ய வேண்டுகிரோம்
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
07-ஏப்-202007:48:46 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் எந்த வெளிநாடும், தங்களின் பிரஜைகளை தவிர வேறு யாரையும் அனுமதிக்காத இத்தருணத்தில் இந்த செய்தி. ஆகவே வேறு வேறு நாடுகளில் சிக்கியிருக்கும் வெளிநாட்டினரை வெளியே செல்ல ஒரு வாய்ப்பளிக்கும் திட்டம் தான் இது. அரசு எடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்று யூகிக்க முடிகிறது. இது ஓரிரு வாரங்களுக்கு மட்டும் இருக்கும். பிறகு இரண்டாவது அடைப்பு.. அழுத்தமாக இருக்கும். தயாராகிக் கொள்ளுங்கள்.
Rate this:
Cancel
naadodi - Dallas,யூ.எஸ்.ஏ
04-ஏப்-202003:30:55 IST Report Abuse
naadodi நீங்க தொறந்து விட்டாலும் அவிக வரணுமே? துபாய், தோஹா, அபு தாபி எல்லாம் மூடித்தேன் இருக்குமுங்க ..தொறந்து விட்டியலோ, கொரோனாவுக்கு வரவேற்பு மாதிரி ஆயிடுமுங்க..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X