சென்னை : தமிழகத்தின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்க நேற்று அரசாணை வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் 32 வருவாய் மாவட்டங்கள் இருந்தன. 2019ல் புதிதாக செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்துார், தென்காசி என ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதனால் மாவட்டங்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்தது.இந்நிலையில் மார்ச்சில் நடந்த சட்டபை கூட்டத்தில் 'நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தமிழகத்தின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும்' என முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து தடையுத்தரவு காலம் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முடிந்த பின் புதிய மாவட்டத்தை உருவாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வருவாய் துறை செயலருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இதற்கான அரசாணையை தமிழக அரசின் தலைமை செயலர் சண்முகம் வெளியிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE