ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் வரும் மே மாதம் 7 ம் தேதி வரையில் ஊரடங்கை நீட்டித்து மாநில அரசு உத்தவு பிறப்பித்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக வரும் மே மாதம் 3 ம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவை பின்பற்றி பல்வேறு மாநிலங்களிலும் ஏப்.,30 வரையிலும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மே மாதம் 3 ம் தேதி வரையிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் புதிய உத்தரவு ஒன்றைவெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாநிலத்தில் வரும் 7 ம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது. மேலும் உணவு பொருட்களை சப்ளை செய்யும் நிறுவனங்களான சோமாட்டோ சுவிக்கி போன்றவற்றிற்கும் தடைவிதிக்கப்படுகிறது. இவ்வாறு அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE