ஜியோவின் பங்குதாரராக மாறும் பேஸ்புக்; ரூ.45 ஆயிரம் கோடி முதலீடு

Updated : ஏப் 22, 2020 | Added : ஏப் 22, 2020 | கருத்துகள் (10) | |
Advertisement
புதுடில்லி: இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ இயங்குதளத்தின் குறைந்த அளவிலான பங்குகளை வாங்க 45,574 கோடி ரூபாயை முதலீடு செய்ய ஒதுக்கியுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.இந்தியாவில் கிட்டத்தட்ட 400 மில்லியன் பயனர்கள் வாட்ஸ்ஆப் செயலியினை பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் தற்போது கட்டண சேவையில் ஈடுபட்டு வரும் கூகுள்பே
Facebook, Jio, Stake, Reliance, Buying, investment, WhatsApp, Reliance Jio, Jio platforms, stakeholder, FB,  பேஸ்புக், ஜியோ, பங்குதாரர், வாட்ஸ்ஆப்

புதுடில்லி: இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ இயங்குதளத்தின் குறைந்த அளவிலான பங்குகளை வாங்க 45,574 கோடி ரூபாயை முதலீடு செய்ய ஒதுக்கியுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.



இந்தியாவில் கிட்டத்தட்ட 400 மில்லியன் பயனர்கள் வாட்ஸ்ஆப் செயலியினை பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் தற்போது கட்டண சேவையில் ஈடுபட்டு வரும் கூகுள்பே மற்றும் பேடிஎம் நிறுவனங்களுக்குப் போட்டியாக ‛வாட்ஸ்ஆப்'பை நிர்வகிக்கும் பேஸ்புக் நிறுவனம் தனது டிஜிட்டல் கட்டண சேவையை இந்தியாவில் தொடங்க முயற்சிக்கிறது.



இந்நிலையில், சிறு குறு வணிகங்களையும் மக்களையும் இணைக்க ரிலையன்ஸ் நிறுவனத்தின் இ-காமர்ஸ் நிறுவனமான ஜியோ-மார்ட்டுடன் பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்ஆப் இணைப்பதில் கவனம் செலுத்திவருவதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக ஜியோ இயங்குதளத்தின் , 9.99 சதவீத பங்குகளை வாங்குவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.


ஜியோ நிறுவனத்தின் ஜியோ பிளாட்பார்ம்சின் 9.99% பங்குகளை பேஸ்புக் நிறுவனம் 43,574 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.


latest tamil news

இது குறித்து பேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், ‛‛ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பகுதியான ஜியோ பிளாட்பார்ம்ஸ் லிமிடெட்டில் நாங்கள் 5.7 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.45,574 கோடி) முதலீடு செய்வதாக அறிவித்துள்ளோம். இதன் மூலம் அந்நிறுவனத்தின் குறைந்த அளவு பங்குதாரராக பேஸ்புக் மாறும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

பழனி - chennai,இந்தியா
22-ஏப்-202015:56:58 IST Report Abuse
பழனி பேஸ்புக்க சீனாகாரன் வாங்காத வர சரி. அமெரிக்கா தான் கவனமா இருக்கணும்.
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
22-ஏப்-202015:16:14 IST Report Abuse
ஆரூர் ரங் முகேஷ் அம்பானி ஏன் தமிழகத்தில் பெரிய முதலீடு போடுவதில்லை ? நம்ம போர்வையாளர்களால்தான். ஆனா ஏகபோகமாக கேடி சகோதரர்கள் எது செய்தாலும் எதிர்க்கமாட்டார்கள். கூலிக்கு மாரடிக்கும் கூட்டம்
Rate this:
22-ஏப்-202017:31:23 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்தமிழனை தமிழனோ, தெலுங்கனோ சுரண்டலாமுங்க...
Rate this:
Cancel
ராகேஷ் - மதுரை ,இந்தியா
22-ஏப்-202013:43:21 IST Report Abuse
ராகேஷ் JIO நிறுவனத்தில் முதலீடு செய்வதனால் வாட்ஸாப்ப் ஐயும் முகநூலையும் இணைக்க திட்டம் என்று நினைக்கிறேன். அவ்வாறு செய்தால் வாட்ஸாப்ப் செயலியை பெரும்பாலானோர் நீக்கிவிட்டு டெலெக்ராம் செயலிக்கு மாறுவார்கள்.
Rate this:
22-ஏப்-202015:30:02 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்முகநூல் வாட்ஸாப் -ஐ எப்பவோ வாங்கியாச்சு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X