தஞ்சாவூர் : சுகாதார பணியாளர்கள், ஊழியர்களை பணிக்கு அழைத்துச் செல்லும் அரசு பஸ் டிரைவர்களுக்கு, கொரோனா தடுப்பு கவச உடைகள் வழங்கப்பட்டுள்ளன.
தஞ்சையில் உள்ள அரசு துறை ஊழியர்கள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்கள் சென்று வருவதற்காக மட்டும், தஞ்சையில் இருந்து கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதுார், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பூதலுார், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு, அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த பஸ்களை இயக்கும் டிரைவர்களுக்கு, ஏற்கனவே முகக் கவசம், கையுறைகள் வழங்கப்பட்டுள்ளன.தற்போது, அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் பொன்முடி உத்தரவுப்படி, பஸ் டிரைவர்களுக்கு கவச உடைகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது, இந்த கவச உடைகளை அணிந்து, டிரைவர்கள் பஸ்சை இயக்கி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE