காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் ஒரே நாளில் புதிதாக 230 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 18 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

வடமாநிலங்களில் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது. குஜராத் மாநிலத்தில் ஒரே நாளில் 230 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் குஜராத்தில் மட்டும் மொத்தம் 3,301 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்த கொரோனா பலி 155 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து குஜராத், மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்பில் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ளது ஆமதாபாத்தில் மட்டும் ஒரே நாளில் 178 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் ஆமதாபாத்தில் 18 பேர் ஒரே நாளில் பலியாகி உள்ளனர்

இந்நிலையில், 313 சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 26,917 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 826 பேர் பலியாகி உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE