துாத்துக்குடி; கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுற்றுவட்டார கிராமங்கள் கரிசல்பூமி எனப்படுகிறது. அங்கு விளையும் வேர்க்கடலைக்கு தனித்த சுவை உண்டு.
வேர்க்கடலை, பனைவெல்லபாகு, சுக்கு, ஏலக்காய் கலந்து தயாரிப்பதுதான் கடலைமிட்டாய். நீண்டகாலமாக கோவில்பட்டி வட்டாரங்களில் கடலைமிட்டாய் உற்பத்தி நடக்கிறது. வெளியூர்களில் தயார் செய்யப்படும் மிட்டாயை கோவில்பட்டி கடலை மிட்டாய் என விற்பனை செய்கின்றனர்.
பத்தாயிரம் குடும்பங்கள் வாழ்கிறது
2014ல் கோவில்பட்டி சப் கலெக்டராக இருந்த விஜய்கார்த்திகேயன் தற்போதைய திருப்பூர் கலெக்டர் கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு கோரி விண்ணப்பித்தார்.சில ஆண்டுகளுக்கு பிறகு கோவில்பட்டி கடலைமிட்டாய் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் அதனை விண்ணப்பிக்க வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து புவிசார் குறியீட்டு மைய தலைமை அலுவலர் சின்னராஜா கூறுகையில், தற்போது புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
அந்த மிட்டாய் தொழிலை நம்பி 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், பத்தாயிரம் குடும்பங்கள் உள்ளனர். இனி போலியாக யாரும் இதனை தயாரிக்க முடியாது. சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளலாம். இதுவரை 34 பொருட்களுக்கு புவிசார்குறியீடு வழங்கப்பட்டுள்ளது. கடலைமிட்டாய் 35 வதாகும் என்றார்.
புவிசார்குறியீடு கிடைத்ததற்காக மி்ட்டாய் தயாரிப்பாளர் சங்க தலைவர் கார்த்தீசன் உள்ளிட்டோர் பதிவுத்துறைக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE