பொருளாதாரத்தை மீட்க புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும்
பொருளாதாரத்தை மீட்க புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும்

பொருளாதாரத்தை மீட்க புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும்

Updated : மே 02, 2020 | Added : ஏப் 30, 2020 | கருத்துகள் (62) | |
Advertisement
புதுடில்லி :'ஊரடங்கை தளர்த்தி, பொருளாதாரதத்தை படிப்படியாக மீட்க, புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும்' என, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர், ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.காங்கிரஸ் எம்.பி., ராகுல், ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர், ரகுராம் ராஜனுடன் நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாகப் பேசினார். பிரச்னையில்லைஅப்போது, ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை
பொருளாதாரத்தை மீட்க புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும்

புதுடில்லி :'ஊரடங்கை தளர்த்தி, பொருளாதாரதத்தை படிப்படியாக மீட்க, புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும்' என, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர், ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.காங்கிரஸ் எம்.பி., ராகுல், ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர், ரகுராம் ராஜனுடன் நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாகப் பேசினார்.


பிரச்னையில்லை



அப்போது, ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை சீரமைப்பது பற்றி கேட்டார். அதற்கு ரகுராம் ராஜன் பதில் அளித்தார். இதன், 'வீடியோ' பதிவை, காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அதில், ரகுராம் ராஜன் கூறியிருப்பதாவது:கொரோனா பரவலைத் தடுக்க, நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், வேலையிழந்து தவிக்கும் ஏழைகளுக்கு உணவளிக்க, இந்தியாவுக்கு, 65 ஆயிரம் கோடி ரூபாய் தேவை.


புத்திசாலித்தனம்



நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 200 லட்சம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், 65 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்குவதில் பிரச்னையில்லை. வைரஸ் பரவலை தடுக்க, ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டால், நாட்டின் பொருளாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்.மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிட்டால், நம் நிதி மற்றும் பண மதிப்பு, குறைவாக தான் உள்ளது. அதனால், பொருளாதாரத்தை படிப்படியாக மீட்பதில், புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும்.கொரோனா பரவலை முழுமையாக கட்டுப்படுத்த, பல மாதங்கள் ஆகலாம். அதற்காக, பொருளாதாரத்தை முடக்க முடியாது. பொருளாதார செயல்பாடுகளை துவக்கினாலும், கொரோனா பாதிப்பு இருக்கத்தான் செய்யும். பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி, சிகிச்சையளிக்கும் பணிகள் தொடர வேண்டும். அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இந்தியாவின் உற்பத்திக்கும், விற்பனைக்கும், சர்வதேச அளவில் நல்ல சந்தை உள்ளது.அதனால், சர்வதேச, 'ஆர்டர்'களை இந்தியாவால் எடுக்க முடியும்; வெற்றிகரமாக்க முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து (62)

Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
02-மே-202001:23:31 IST Report Abuse
Dr.C.S.Rangarajan ரகுராமன் அவர்கள் அவரின் கருத்தின் தெரிவிப்பதில் தவறில்லை. காழ்ப்புணர்ச்சி காரணங்களால்தான் உலகின் எந்தக்கோடியில் இருந்தாலும் 'இலவச' ஆலோசனைகள் தந்துகொண்டிருக்கிறார் என எண்ணினால் சரியா, தவறா? செஞ்சோற்றுக்கடனை தீர்ப்பதுதான் முறை என்றாலும், வஞ்சனையில் வீழ்த்துக்கொண்டிருக்கிறார் எனத்தான் எண்ணத்தோன்றுகிறது. 'புத்திசாலித்தனத்தை'பற்றி யார், யாரிடம், எங்கு, எப்போது கூறவேண்டும் என புத்திசாலித்தனத்துடன் ரகுராம் அவர்கள் சிந்திக்கவில்லையோ என நாம் அவரை இன்னும் மதிப்பதால் வருந்தினால் சரியா, தவறா?
Rate this:
Cancel
adalarasan - chennai,இந்தியா
01-மே-202022:39:58 IST Report Abuse
adalarasan ஆமாம் உலகிலேயே, நீங்களும், ராகுல்ஜியும் தான் புத்திசாலிகள்கேட்கவேண்டியுதான்நீங்கள் குடிமகனாக இருக்கும், அமெரிக்கா அதிபருக்கு முதலில் புத்திமதி சொல்லவும்இங்கு நிறைய இந்தியாவில் உள்ளனர்,பார்த்துக்கொள்வார்கள், கவலை வேண்டாம், அரசியலும் வேண்டாம்?
Rate this:
Cancel
inamar - chennai,இந்தியா
01-மே-202022:19:20 IST Report Abuse
inamar He is not an Indian citizen and why he is bothered about my country economy. When he was RBI governor he spoiled entire economy. Saathan vedham oodhugiradhu
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X