விருதுநகர்:ஒரே
நாளில் 6 லட்சம் பேர் உதவி கேட்டதாக தி.மு.க., கூறுவது 'ஜீபூம்பா'
வித்தை என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கிண்டலடித்தார்.
விருதுநகரில் அவர் கூறியதாவது:2016
தேர்தலில் அறிவித்தப்படி டாஸ்மாக் கடைகள்
குறைக்கப்பட்டுள்ளது.
மக்கள் விரும்பும் வகையில் செயல்படும் அம்மா உணவகங்களில் வெவ்வேறு
வகை உணவு தருகிறோம். தி.மு.க.,வின் தொலைபேசிக்கு ஒரே நாளில் 6 லட்சம்
பேர் உதவி கேட்டது ஜீபூம்பா வித்தை. நான் முயற்சித்தபோது தொடர்பு
கொள்ள
முடியவில்லை.
காவிரி மேலாண்மை விஷயத்தில் தமிழக மக்களுக்கு
விரோதமான செயலை அரசு செய்யாது. எதிர்கட்சியினர் மத்திய, மாநில அரசு
நடவடிக்கைகளை விமர்சனம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்
செயல்படுகின்றனர். குற்றம் சொல்லும் தலைவராக ஸ்டாலின்
உள்ளார். பட்டாசு ஆலைகள் மே 3க்கு பின் திறக்க கேட்டுள்ளனர். அனைத்து
தொழில் துறைகளையும்
படிப்படியாக செயல்படுத்த அரசு நடவடிக்கை
எடுக்கும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE