மஹா.,வில் 21ல் எம்.எல்.சி., தேர்தல்; உத்தவ்வின் சிக்கல் நீங்கியது

Updated : மே 03, 2020 | Added : மே 02, 2020 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி : மஹாராஷ்டிராவில், வரும், 21ம் தேதி, எம்.எல்.சி., தேர்தல் நடத்தபடும் என, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, உத்தவ் தாக்கரே, முதல்வராக தொடர்வதில், சிக்கல் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவில், கடந்த ஆண்டு நவ., 28ல், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்., கூட்டணி அரசு பதவியேற்றது. முதல்வராக, சிவசேனா தலைவர், உத்தவ் தாக்கரே பதவியேற்றார். ஆனால், அவர்,
Maharashtra,UddhavThackeray,mlc_election,உத்தவ்,உத்தவ்தாக்கரே,சிவசேனா

புதுடில்லி : மஹாராஷ்டிராவில், வரும், 21ம் தேதி, எம்.எல்.சி., தேர்தல் நடத்தபடும் என, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, உத்தவ் தாக்கரே, முதல்வராக தொடர்வதில், சிக்கல் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.



மஹாராஷ்டிராவில், கடந்த ஆண்டு நவ., 28ல், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்., கூட்டணி அரசு பதவியேற்றது. முதல்வராக, சிவசேனா தலைவர், உத்தவ் தாக்கரே பதவியேற்றார். ஆனால், அவர், எம்.எல்.ஏ.,வாகவோ, எம்.எல்.சி.,யாகவோ இல்லை. அரசியல் சாசனப்படி, முதல்வர் அல்லது அமைச்சராக பதவியேற்பவர்கள், ஆறு மாதங்களுக்குள், எம்.எல்.ஏ., அல்லது எம்.எல்.சி.,யாக தேர்வு பெற வேண்டும்.



அதன்படி, உத்தவ் தாக்கரே, மே, 27ம் தேதிக்குள், எம்.எல்.ஏ அல்லது எம்.எல்.சி.,யாக தேர்வு பெற வேண்டும். இல்லாவிடில், முதல்வர் பதவியிலிருந்து, அவர் விலக நேரிடும். மஹாராஷ்டிராவில், காலியாக உள்ள, ஒன்பது எம்.எல்.சி., இடங்கள், கடந்த, 24ம் தேதியுடன் காலியானது. இந்த இடங்களுக்கு தேர்தல் நடக்கும் போது, அதில் போட்டியிட்டு வெற்றி பெற, உத்தவ் தாக்கரே திட்டமிட்டு இருந்தார்.




'வீடியோ கான்பரன்ஸ்'


ஆனால், கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், நாட்டில் தேர்தல் மற்றும் அரசியல் நடவடிக்கைகள் முடங்கியுள்ளன. இதனால், மஹாராஷ்டிராவில், எம்.எல்.சி., தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில், கடந்த, 9ம் தேதி மும்பையில் நடந்த மஹாராஷ்டிரா அமைச்சரவை கூட்டத்தில், 'கவர்னருக்கு ஒதுக்கப்பட்டுள்ள, இரண்டு எம்.எல்.சி., இடங்களில், ஒரு இடத்தில் முதல்வர், உத்தவ் தாக்கரேவை நியமிக்க வேண்டும்' என, கவர்னர், கோஷ்யாரிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.



அதோடு, மாநில அமைச்சர்கள், கவர்னரை நேரில் சந்தித்தும் கோரிக்கை விடுத்தனர்.இது பற்றி சட்ட வல்லுனர்களிடம் ஆலோசித்த கவர்னர், கோஷ்யாரி, மாநிலத்தில் காலியாக உள்ள, ஒன்பது, எம்.எல்.சி., இடங்களுக்கான தேர்தலை நடத்த, தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்து, நேற்று முன்தினம் கடிதம் அனுப்பினார்.



இதையடுத்து, அமெரிக்காவில் உள்ள தலைமை தேர்தல் கமிஷனர், சுனில் அரோராவுடன், டில்லியில் உள்ள தேர்தல் கமிஷனர்கள் அசோக் லவாசா, சுசில் சந்திரா, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக ஆலோசனை நடத்தினர். இதில், மே, 21ம் தேதி, மஹாராஷ்டிராவில், ஒன்பது எம்.எல்.சி., இடங்களுக்கான தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது.




மாநில அரசு உறுதி:


இது பற்றி, தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மஹாராஷ்டிராவில், ஒன்பது எம்.எல்.சி., இடங்களுக்கான, வேட்பு மனு தாக்கல், வரும், 4ம் தேதி துவங்கும்; மனு தாக்கலுக்கு கடைசி நாள், 11ம் தேதி. 21ம் தேதி ஓட்டுப்பதிவு முடிந்த பின், மாலை, 4:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கும்.நரசிம்மராவ், தேவ கவுடா ஆகியோர் பிரதமர்களாக இருந்த போதும், பல்வேறு மாநில முதல்வர்களுக்காகவும், இது போன்ற சூழ்நிலையில், இடைத்தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.



அதேபோல் தான், இப்போதும் நடத்தப்பட உள்ளது. இது தொடர்பாக, தேசிய மற்றும் மஹாராஷ்டிரா மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துக்களை, தேர்தல் கமிஷன் கவனத்தில் எடுத்துக் கொண்டது. சமூக விலகலை கடைப்பிடித்து, நோய் தொற்று பரவாமல், தேர்தலை நடத்த வேண்டிய பொறுப்பு, மாநில அரசுக்கு உள்ளது. அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க, மாநில அரசு உறுதியளித்து உள்ளது.



தேர்தலை சுமூகமாகவும், சமூக விலகலை கடைப்பிடித்து நடத்தப்படுவதை உறுதி செய்யவும், தனி அதிகாரி ஒருவரை, மத்திய உள்துறை செயலர் நியமிக்க வேண்டும். இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.




60 ஆண்டுகள் நிறைவு:


எம்.எல்.சி., தேர்தல் நடக்க உள்ளதையடுத்து, முதல்வராக தொடர்வதில், உத்தவ் தாக்கரேவுக்கு ஏற்பட்டிருந்த சிக்கல் நீங்கியுள்ளது. இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம் துவக்கப்பட்டு, நேற்றுடன், 60 ஆண்டுகள் நிறைவு பெற்றது. இதையொட்டி, மும்பையில், கவர்னர் மாளிகைக்கு சென்ற முதல்வர், உத்தவ் தாக்கரே, கவர்னர், கோஷ்யாரியை சந்தித்தார். மஹாராஷ்டிரா உதய தின வாழ்த்துக்களை, இருவரும் தெரிவித்துக் கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

sankaseshan - mumbai,இந்தியா
02-மே-202017:36:32 IST Report Abuse
sankaseshan பதவியை தக்க வைக்க பிஜேபி காலில் விழுந்த மானஸ்தன்.
Rate this:
Cancel
பால சுப்பிரமணியன் அ. இது ஓர் ஆரம்பமே. இனிதான் தலைவர் பல சவால்களையும் சிக்கல்களையும் சந்திக்க வேண்டியிருக்கும் நேரம் வந்து விட்டது. திடீர் தோழர்களை நம்ப முடியாது ! பெரிய மாநிலத்தை ஆள்வதற்கு குடும்பப்பிண்ணணி மட்டும் உதவாது, சொந்த சாமர்த்தியமும் வேண்டும். காலம்தான் பதில் சொல்லும் !
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
02-மே-202007:04:33 IST Report Abuse
blocked user ஜான் சேனா சிக்கலில் இருந்து தப்பிவிட்டது என்று எண்ணவேண்டாம். அடுத்து தனியாக, கூட்டாக, கூட்டில் தனியாக ஆயிரம் பிரச்சினைகள் வரத்தான் செய்யும்.
Rate this:
s.rajagopalan - chennai ,இந்தியா
02-மே-202013:31:31 IST Report Abuse
s.rajagopalanகொராணா போவட்டும் ..பொறவு இருக்கு கச்சேரி ...எம் எல் சி பதவி சும்மாவா கெடைச்சிருக்கும் ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X