பள்ளி, கல்லூரிகள் திறந்த பின் பின்பற்ற வேண்டியது என்ன..?

Updated : மே 02, 2020 | Added : மே 02, 2020 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி: கொரோனா பிரச்னை முடிவுக்கு வந்த பின், பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டதும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்த பட்டியலை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தயாரித்து வருகிறது.கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், மார்ச், 16லிருந்து, நாடு முழுதும் உள்ள பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. கல்லுாரிகளுக்கான மாணவர் சேர்க்கையை, ஆகஸ்டில் துவங்கலாம் என்றும்,

புதுடில்லி: கொரோனா பிரச்னை முடிவுக்கு வந்த பின், பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டதும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்த பட்டியலை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தயாரித்து வருகிறது.




latest tamil news


கல்லூரிகள் எடுக்க வேண்டிய நடவடிக்கை

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், மார்ச், 16லிருந்து, நாடு முழுதும் உள்ள பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. கல்லுாரிகளுக்கான மாணவர் சேர்க்கையை, ஆகஸ்டில் துவங்கலாம் என்றும், செப்டம்பரில்இருந்து வகுப்புகளை துவங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்றும், பல்கலை மானியக் குழு பரிந்துரை செய்துள்ளது. அதே நேரத்தில், பள்ளிகளில் வகுப்புகள் துவங்குவது குறித்து, இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. 'ஆன்லைன்' மூலமாக பாடங்களை நடத்தும்படி ஆலோசனை கூறப்பட்டு உள்ளது.



இந்நிலையில், கொரோனா பிரச்னை முடிவுக்கு வந்த பின், பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டதும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்த பட்டியலை, மனிதவள அமைச்சகத்தின் பரிந்துரையின்படி, பள்ளி கல்வித் துறையினர், பல்கலை மானியக் குழுவினர் தயாரித்து வருகின்றனர்.



latest tamil news


இது குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:கொரோனா பாதிப்புக்குப் பின், பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படும்போது, மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். பள்ளிகள் திறக்கப்பட்ட தும், மாணவர்கள் முக கவசம் அணிந்து வருவது கட்டாயமாக்கப்படும். ஆய்வகங்கள், கழிப்பறை ஆகியவற்றில் சுகாதார வசதி கள் செய்யப்பட வேண்டும். வகுப்புகளிலும், பஸ்களில் வரும்போதும், சமூக விலகல் நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். அடிக்கடி கைகளை கழுவும்படி மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். காலை பிரார்த்தனை கூட்டம், மைதானங்களில் விளையாடுவது போன்ற நடைமுறைகளை சில மாதங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, பல்வேறு விதிமுறைகளுடன் கூடிய பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறின.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

02-மே-202010:33:09 IST Report Abuse
தமிழ் மொதல்ல ஊரடங்கை முடிங்க அப்புறமா மத்ததெல்லாம் பார்க்கலாம். இப்படித்தான் ஒவ்வொரு முறையும் சொல்லிட்டு ஊரடங்கை வளர்த்திட்டே போறீங்க.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
02-மே-202008:56:50 IST Report Abuse
RajanRajan முக்கியமா பீஸ் கேட்டு நச்சரிக்காதீங்க. முதல் ஆறு மாதங்களுக்கு இலவச கல்வி வழங்குங்க. பீஸ்க்கு பதில் பஸ் கட்டணத்தை ஓஹோ பண்ணீடாதீங்க. ஒவ்வோரு மாணவர் சேர்க்கையையும் விற்று பார்த்த துட்டை களமிறக்குங்க. கல்லா கட்டணுமில்லே.
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
03-மே-202008:37:24 IST Report Abuse
skv srinivasankrishnaveniம்ம்ம்ம்ம்ம்ம் அஸ்கு புஷ்க்கு பலரும் ஸ்கூல் நடத்துவதே பணத்துக்குதானுங்கோ பீஸ் வசதியானவர் தந்துருவாங்க இல்லாதவர் பாடுதான் அவஸ்தை பாவம்...
Rate this:
Cancel
நிலா - மதுரை,இந்தியா
02-மே-202007:55:00 IST Report Abuse
நிலா அரசு பள்ளிகளில் 30 முதல் 40 வரை மாணவ மாணவியர்கள் ஒரு வகுப்பில் இருப்பார்கள் எப்படி சமூக விலகலை கடைபிடிக்க முயலும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X