'ஆரோக்ய சேது' பதிவிறக்கம்: 73 சதவீத ஆசிரியர் ஆர்வம்

Updated : மே 02, 2020 | Added : மே 02, 2020 | கருத்துகள் (2) | |
Advertisement
திருப்பூர் : தமிழக ஆசிரியர்களில், 73 சதவீதம் 'ஆரோக்ய சேது' செயலியை பதிவிறக்கம் செய்துள்ளதாக தொடக்க கல்வித்துறை அறிவித்துள்ளது.கொரோனா ஒழிப்பு தொடர்பான, 'ஆரோக்ய சேது' எனும் செயலியை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இச்செயலியை ஆசிரியர்கள் உட்பட அனைத்து மாணவர்களும் பதிவேற்றம் செய்ய, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதை உறுதிப்படுத்த, அனைத்து மாவட்டங்களிலும்

திருப்பூர் : தமிழக ஆசிரியர்களில், 73 சதவீதம் 'ஆரோக்ய சேது' செயலியை பதிவிறக்கம் செய்துள்ளதாக தொடக்க கல்வித்துறை அறிவித்துள்ளது.



latest tamil news


கொரோனா ஒழிப்பு தொடர்பான, 'ஆரோக்ய சேது' எனும் செயலியை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இச்செயலியை ஆசிரியர்கள் உட்பட அனைத்து மாணவர்களும் பதிவேற்றம் செய்ய, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதை உறுதிப்படுத்த, அனைத்து மாவட்டங்களிலும் நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்கள் கல்வி மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள், கல்வி அலுவலகர்களை, இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய வலியுறுத்துவதோடு, அதற்கான விவரங்களையும் திரட்டி வருகின்றனர்.



latest tamil news


கடந்த., ஏப்., 28 வரை பதிவிறக்கம் செய்தவர்களின் தகவலை மாவட்ட வாரியாக தொடக்க கல்வித்துறை வெளியிட்டுள்ளது. கல்வி அதிகாரிகள் கூறுகையில், 'இதுவரை, 73 சதவீதம் பேர், 'ஆரோக்கிய சேது' செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். அதிகபட்சமாக செங்கல்பட்டு, ராணிபேட்டை, திருவாரூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில், 97 சதவீதம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். 'கோவை, திருப்பூர், சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் சொற்ப அளவிலே இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

Lion Drsekar - Chennai ,இந்தியா
02-மே-202014:32:12 IST Report Abuse
Lion Drsekar ஆசிரியர்கள் ஆர்வம் என்பது தவறு அவர்கள் மிரட்டப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை, அந்த துறையினர் முதலில் செய்தி அனுப்புகிறார்கள், அதற்க்கு எந்த பள்ளிகளும் பதில் பொதுவதில்லை அந்த குழுமங்களில், பிறகு எச்சரித்து அனுப்புகிறார்கள் அதற்கும் யாரும் செவி சாய்க்கவில்லை, கடைசியாக ஆணையர், அவர், இவர் என்று பதவிகளை போட்டு இதற்க்கு குறிப்பாக பதிவு செய்யவில்லை என்றால் கடும் நடவடிக்கை என்றவுடன் பயந்து பதிவு செய்கின்றனர், இந்த செய்தி ஒரு புறம் ஆசிரியர்கள் பயந்து செயல்படுகிரார்கள் என்றே கூறலாம், அடுத்து இனொரு மிரட்டல் அனைத்து பள்ளிகளும் தங்கள் பள்ளிகளில் இருக்கும் அறைகளின் விபரங்கள் அனுப்ப குழுமத்தில் செய்தி அனுப்பினார்கள், யாரும் மதிக்கவில்லை, அடுத்து உயர் அதிகாரிகளின் பதவியை போட்டு மிரட்டியவுடன் அனைவரும் மிரண்டு பொய் பதிவு செய்கிறார்கள், அதில் கொடுமை என்னவென்றால் உயர் அதிகாரிகள் எந்த நேரத்திலும் பள்ளிகளுக்கு வந்து பார்ப்பார்களாம், அந்த நேரத்தில் தலைமை ஆசிரியர் அல்லது அதற்க்கு நிலையான ஒருவர் கண்டிப்பாக இருக்கவேண்டுமாம், அதோடு நிற்கவில்லை இவர்களது மிரட்டல், இவர்கள் வரும்போது மிகப் பெரிய அறைகளில் எங்குமே எந்த மேஜை, நற்கலி, பெஞ்சுகள் எதுவுமே இருக்கக்கூடாதாம்? இதை யாரிடம் கூறுவது என்று ஆசிரியர் பெருமக்கள் அழுகிறார்கள், கொரோனா நோயாளிகளுக்கு தனிமை படுத்த இடம் தேவையாம் ஆகவே இப்படி ஒரு ஆணை பறக்கிறது, அரண்மனை போன்று கட்டப்பட்டு இருக்கும் கல்லூரிகள் இருக்க இப்படி ஒரு மிரட்டலுக்கு பயந்து பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரிய பெருமக்கள் தூக்கம் இல்லாமல் தவிக்கிறார்கள், வந்தே மாதரம்
Rate this:
Cancel
02-மே-202014:24:02 IST Report Abuse
நக்கல் நான் இந்த செயலியை வைத்திருக்கிறேன்.. இதில் நாம் இருக்கும் இடத்தை சுற்றி 500m,.1km, 2km , 5km, 10km தொலைவில் எத்தனை பேர் பாதிக்க பட்டிருக்கிறார்கள், எத்தனை பேர் கண்காணிக்கப் படுகிறார்கள் என்பதை தெளிவாக சொல்கிறது.... அனைவரும் பதிவிறக்கம் செய்தால் கிடைக்கும் விவரம் இன்னும் துல்லியமாக இருக்கும்...
Rate this:
Cancel
Tamilan - kailasa,இந்தியா
02-மே-202013:16:30 IST Report Abuse
Tamilan வேலை நாட்களிலே இந்த அரசு ஆசிரியர்கள் ஒழுங்கா வேலை செய்வதில்லை ......சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வருவதில்லை , சரியாக பாடம் எடுக்க தயாரிப்பு செய்வது இல்லை ........வேலை செய்யாமலே , கை நிறைய சம்பளம் வாங்கி செல்லும் ..அரசு ஆசிரியர்கள் ஆசைப்படத்தான் செய்வார்கள் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X