இஸ்லாமாபாத்: நமது அண்டை நாடான பாக்.,கில் கொரோனா வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,297 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. பாக்.,கை பொருத்தவரை ஒரு நாள் பாதிப்பில் இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாக உள்ளது.

இதையடுத்து பாக்.,கில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்து 22 ஆக உயர்ந்துள்ளது. ஒரு நாளில் பரிசோதனை செய்யப்படும் எண்ணிக்கை 9,000 ஆக உயர்ந்துள்ளது. அதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறி மசூதிகளில் அதிகளவு மக்கள் அந்நாட்டில் கூடுகிறார்கள். இது எதிர்காலத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று அந்நாட்டு மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். இதுவரை 437 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். நேற்று ஒரே நாளில் 20 பேர் பலியாகி உள்ளனர். மொத்தம் 4753 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE