புதுடில்லி: மத்திய அரசு மார்ச் 24ல் ஊரடங்கை அமல்படுத்தாமல் இருந்திருந்தால், இப்போது நாட்டின் நிலைமை பயங்கரமாக இருந்திருக்கும் என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: கடந்த மார்ச் 24ம் தேதி, மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது. அப்போது அந்த முக்கிய முடிவை மத்திய அரசு எடுக்காமல் இருந்திருந்தால், இப்போது நாட்டின் நிலைமை படுபயங்கரமாக இருந்து இருக்கும். அப்போது நாடு கொரோனா வைரசை எதிர்க்க தயார நிலையில் இல்லை. சமூக விலகல் குறித்து நாம் யாரும் அறிந்திருக்கவில்லை. போதுமான மருத்துவ உபகரணங்களும், சோதனை கருவிகளும் அப்போது இல்லை. மருத்துவமனைகளும் தயாராகாமல் இருந்தது.

டில்லியில் பொது இடங்களில் எச்சில் துப்பினால், மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். சமூக விலகலை கடைபிடிக்கும் நோக்கில், திருமண விழாக்களில் 50 பேருக்கு மேல் அனுமதியில்லை. இறுதி சடங்குகளில் பங்கேற்க 20 பேருக்கு மேல் அனுமதியில்லை. டில்லி அரசால் ஊரடங்கை நீண்ட நாட்கள் தாக்குப்பிடிக்க முடியாது. கடந்த ஆண்டு ஏப்., மாதத்தில் மாநில வருவாய் ரூ. 3500 கோடியாக இருந்தது. அதுவே இந்த ஆண்டு ரூ.300 கோடியாக குறைந்துள்ளது. இப்படி இருந்தால் அரசு எவ்வாறு செயல்படும்? இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE